Tuesday, July 1, 2025

குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிய 5 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்ற காவலர்கள் 5 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 3 லட்ச ரூபாய் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பெயரில் திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இறுதிக்கட்ட விசாரணையை மேற்கொண்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தஞ்சாவூர் சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news