உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 200 ஊழியர்கள் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போர் விமானங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.