இந்திய ரெயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ (நிலை–1) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 2026 பிப்ரவரி 20 ஆகும்.
பணி : குரூப் ‘டி’ (நிலை–1)
காலியிடங்கள் : 22,000
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
ஐடிஐ முடித்து என்சிவிடி / எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது
என்சிவிடி வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (National Apprenticeship) முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.01.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழித் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் – ரூ.250
இதர அனைத்து பிரிவினருக்கும் – ரூ.500
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
https://www.rrbapply.gov.in
https://www.rrbchennai.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
2026 பிப்ரவரி 20, இரவு 11.59 மணி வரை
