Monday, December 1, 2025

பேருந்துகளில் செல்போன் திருடிய 2 பேர் கைது

திருப்பூர் தெற்கு போலீசார் மப்டியில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இருவரும் பேருந்து நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் , தண்டபாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பேருந்து நிலையங்களில் கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News