<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sathiyam TV</title>
	<atom:link href="https://sathiyam.tv/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://sathiyam.tv/</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 22 Aug 2026 11:22:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://sathiyam.tv/wp-content/uploads/2024/11/cropped-cropped-Sathiyam-New-Logo-300x300-1-32x32.jpg</url>
	<title>Sathiyam TV</title>
	<link>https://sathiyam.tv/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமெரிக்காவின் மூக்கை உடைத்த &#8216;ஈரான்&#8217;! வாங்கிக் கட்டிக்கொண்ட டிரம்ப்!</title>
		<link>https://sathiyam.tv/iran-deals-a-blow-to-americas-pride-trump-takes-a-hit/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 11:22:08 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659293</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைத் தளபதி அகமது வாஹிதி ஒரு அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ஈரான் ஒரு &#8220;உறுதியான தற்காப்பு கவசத்தை&#8221; (Solid Defensive Shield) உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தேசிய பாதுகாப்புத் தொழில் தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், தங்களது நாடு தற்போது ஒரு புதிய வடிவிலான ராணுவ ஆக்கிரமிப்புகளைச் சந்தித்து வருவதாகவும், அதனை [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/iran-deals-a-blow-to-americas-pride-trump-takes-a-hit/">அமெரிக்காவின் மூக்கை உடைத்த &#8216;ஈரான்&#8217;! வாங்கிக் கட்டிக்கொண்ட டிரம்ப்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைத் தளபதி அகமது வாஹிதி ஒரு அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ஈரான் ஒரு &#8220;உறுதியான தற்காப்பு கவசத்தை&#8221; (Solid Defensive Shield) உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஈரான் தேசிய பாதுகாப்புத் தொழில் தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், தங்களது நாடு தற்போது ஒரு புதிய வடிவிலான ராணுவ ஆக்கிரமிப்புகளைச் சந்தித்து வருவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களைப் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக &#8216;எகனாமிக் டி-டே&#8217; (Economic D-Day) என்ற மாபெரும் பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஈரானின் எண்ணெய் கடத்தல், நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து என அனைத்து உயிர்நாடிகளையும் முற்றிலுமாக முடக்கி, அந்த நாட்டை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்துவதே ட்ரம்பின் மெகா திட்டமாகும்.</p>



<p class="wp-block-paragraph">ஈரானின் ராணுவக் கட்டமைப்பு ஏற்கனவே பலவீனமடைந்துவிட்டதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் ட்ரம்ப் சவால் விடுத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம் என்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக இருப்பதை அவரது பேச்சுகள் உணர்த்துகின்றன.</p>



<p class="wp-block-paragraph">அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகளை ஈரான் ஒரு &#8220;பழகிப்போன பழைய திரைப்படம்&#8221; என்று கூறி எள்ளி நகையாடியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமூக வலைதளத்தில் பதிவிடும்போது, கடந்த 14 ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த எந்தவொரு &#8220;மிகக்கடுமையான&#8221; தடையும் ஈரானைப் பணிய வைக்கவில்லை என்றும், தற்போதைய இந்த மிரட்டலும் தோல்வியிலேயே முடியும் என்றும் மிகக்கடுமையாகச் சாடியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஈரானைப் பொருத்தவரை, மிரட்டல்களுக்கு அடிபணிவதை விடத் தங்களது இறையாண்மையைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதில் அந்த நாடு உறுதியாக இருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">இதற்கிடையில், உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைத் தளர்த்தவில்லை.</p>



<p class="wp-block-paragraph">அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற 14 அம்சக் கோரிக்கைகளை ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் காலிபாஃப் முன்வைத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் இந்த அதிகாரப் போட்டி, உலகப் பொருளாதாரத்திலும், சர்வதேச அமைதியிலும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/iran-deals-a-blow-to-americas-pride-trump-takes-a-hit/">அமெரிக்காவின் மூக்கை உடைத்த &#8216;ஈரான்&#8217;! வாங்கிக் கட்டிக்கொண்ட டிரம்ப்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்கா &#8211; கனடா உறவில் விழுந்த &#8216;இடி&#8217;! பின்னணி என்ன?</title>
		<link>https://sathiyam.tv/a-bolt-from-the-blue-in-us-canada-relations-what-is-the-backstory/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 10:59:21 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659290</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவுக்கும், அதன் நீண்டகால நட்பு நாடான கனடாவுக்கும் இடையேயான வர்த்தக உறவு, இப்போது, ஒரு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. கனடாவின் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது, 50 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே, ஒரு புதிய வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது. இந்த வரி விதிப்பால், கனடாவின் ஹாக்கி ஸ்டிக் முதல், மருத்துவ உபகரணங்கள் வரை, பல பொருட்கள் பாதிக்கப்படும். கடைசி நிமிடத்தில், [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-bolt-from-the-blue-in-us-canada-relations-what-is-the-backstory/">அமெரிக்கா &#8211; கனடா உறவில் விழுந்த &#8216;இடி&#8217;! பின்னணி என்ன?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">அமெரிக்காவுக்கும், அதன் நீண்டகால நட்பு நாடான கனடாவுக்கும் இடையேயான வர்த்தக உறவு, இப்போது, ஒரு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கனடாவின் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது, 50 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே, ஒரு புதிய வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த வரி விதிப்பால், கனடாவின் ஹாக்கி ஸ்டிக் முதல், மருத்துவ உபகரணங்கள் வரை, பல பொருட்கள் பாதிக்கப்படும். கடைசி நிமிடத்தில், அமெரிக்கா முன்வைத்த வர்த்தக ஒப்பந்தத்தின் புதிய நிபந்தனைகள், &#8220;நியாயமற்றதாகவும், பொருளாதாரத்திற்கு விரோதமானதாகவும்&#8221; இருந்ததால், அதனை ஏற்க மறுத்து, வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து, கனடா வெளியேறியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">&#8220;அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றங்கள், எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன,&#8221; என்று, கனடா பிரதமர் மார்க் கார்னி, காட்டமாகக் கூறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், பாதிக்கப்பட்ட கனடா தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும், தனது அரசு, கூடுதல் ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், அமெரிக்காவோ, பழியை கனடா மீது சுமத்துகிறது. &#8220;நாங்கள், கனடாவிற்கு, ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை வழங்கினோம்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், அவர்கள், கடைசி நேரத்தில், புதிய கோரிக்கைகளை வைத்து, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விஷயங்களிலிருந்து பின்வாங்கினார்கள்,&#8221; என்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரீர் (Jamieson Greer) கூறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த வரி விதிப்பின் பொருளாதாரத் தாக்கத்தை விட, அரசியல் தாக்கம், மிகவும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஆண்டு மட்டும், இரு நாடுகளுக்கும் இடையே, 880 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள், வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">5,525 மைல் நீளமுள்ள, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை, எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல், நட்பின் அடையாளமாகத் திகழ்கிறது. தினமும், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், இந்த எல்லையைக் கடந்து செல்கின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், டிரம்ப், கனடாவை, &#8220;அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவோம்&#8221; என்பது போன்ற, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து கூறி, இந்த நட்புறவில், ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளார். இதனால், கனடா மக்கள், கடும் கோபத்தில் உள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">அமெரிக்கத் தூதரை வெளியேற்றக் கோரும் ஒரு மனுவில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவிலும், வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அதிருப்தியில் உள்ள மக்களின் மீது, இந்த புதிய வரி, மேலும் ஒரு சுமையை ஏற்றும். இந்த வர்த்தகப் போரால், இரு நாடுகளின் பொருளாதாரமும், நட்புறவும், ஒரு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-bolt-from-the-blue-in-us-canada-relations-what-is-the-backstory/">அமெரிக்கா &#8211; கனடா உறவில் விழுந்த &#8216;இடி&#8217;! பின்னணி என்ன?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா கொடுத்த மரண அடி! காஷ்மீர் விவகாரத்தில் கதறும் &#8216;பாகிஸ்தான்&#8217;!</title>
		<link>https://sathiyam.tv/a-crushing-blow-dealt-by-india-pakistan-wails-over-the-kashmir-issue/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 10:06:56 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659287</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச அளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ராஜதந்திரப் போர் மீண்டும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட கருத்து, பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அதற்கு இந்தியா அளித்துள்ள பதிலடி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்றும், பாகிஸ்தான் காட்டும் இத்தகைய எதிர்வினைகள் வெறும் &#8220;விரக்தி&#8221; மட்டுமே என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-crushing-blow-dealt-by-india-pakistan-wails-over-the-kashmir-issue/">இந்தியா கொடுத்த மரண அடி! காஷ்மீர் விவகாரத்தில் கதறும் &#8216;பாகிஸ்தான்&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">சர்வதேச அளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ராஜதந்திரப் போர் மீண்டும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட கருத்து, பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அதற்கு இந்தியா அளித்துள்ள பதிலடி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்றும், பாகிஸ்தான் காட்டும் இத்தகைய எதிர்வினைகள் வெறும் &#8220;விரக்தி&#8221; மட்டுமே என்றும் இந்தியா மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்ட இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசினார்.</p>



<p class="wp-block-paragraph">அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் என்பது &#8220;இந்தியாவின் மிக முக்கியமான ஒரு பகுதி&#8221; என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">காஷ்மீரின் அபாரமான அழகைப் புகழ்ந்த அவர், அமெரிக்கக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை வரும் காலங்களில் குறைப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியை வெளியிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">இது காஷ்மீரின் அமைதி மற்றும் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரின் இந்தப் பேச்சு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய இடியாக இறங்கியது.</p>



<p class="wp-block-paragraph">ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரியை உடனடியாக நேரில் அழைத்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.</p>



<p class="wp-block-paragraph">காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டிற்கு இந்த கருத்து முரணாக இருப்பதாகவும், இது உண்மைக்கு மாறானது என்றும் பாகிஸ்தான் வாதிட்டது.</p>



<p class="wp-block-paragraph">உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து கிளப்பி வரும் பாகிஸ்தானிற்கு, ஒரு வல்லரசு நாட்டின் தூதரே இத்தகைய கருத்தைத் தெரிவித்தது பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தானின் இந்தச் சலசலப்பிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மிகக் கூர்மையான ஒரு பதிலைக் கொடுத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த விரக்தி நிலை குறித்துத் தான் கருத்துச் சொல்லத் தேவையில்லை என்று மிக அலட்சியமாகத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph"> &#8220;ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் ஒரு பகுதி என்பது ஆணித்தரமான உண்மை; அது நேற்றும், இன்றும், என்றும் மாறாது&#8221; என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தானின் புலம்பல்களை இந்தியா சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதையே இந்தப் பதில் உணர்த்துகிறது. சர்வதேச மேடையில் காஷ்மீர் விவகாரத்தைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி வரும் பாகிஸ்தானிற்கு, அமெரிக்கத் தூதரின் கருத்தும் இந்தியாவின் துணிச்சலான பதிலடியும் ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">காஷ்மீரில் நிலவும் எதார்த்தமான சூழலை உலக நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பது, இந்தியாவின் ராஜதந்திரத்திற்குப் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தானின் பிடிவாதம் ஒருபுறம் இருந்தாலும், காஷ்மீர் இந்தியாவின் இதயம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.</p>



<figure class="wp-block-embed is-type-rich is-provider-x wp-block-embed-x"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="550" data-dnt="true"><p lang="en" dir="ltr">It was a pleasure to receive <a href="https://x.com/USAmbIndia?ref_src=twsrc%5Etfw">@USAmbIndia</a> Sergio Gor in Srinagar today. We had a very good conversation about the possibilities that exist to widen &amp; deepen the engagement between J&amp;K &amp; the United States of America, particularly in areas like tourism, horticulture &amp; the new… <a href="https://t.co/VsJdJSbzJg">pic.twitter.com/VsJdJSbzJg</a></p>&mdash; Omar Abdullah (@OmarAbdullah) <a href="https://x.com/OmarAbdullah/status/2090030367223034346?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote><script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>
<p>The post <a href="https://sathiyam.tv/a-crushing-blow-dealt-by-india-pakistan-wails-over-the-kashmir-issue/">இந்தியா கொடுத்த மரண அடி! காஷ்மீர் விவகாரத்தில் கதறும் &#8216;பாகிஸ்தான்&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எகிப்தில் 3000 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த ரகசியம்! மறைந்து போன &#8216;மெசன்&#8217; நகரம் ?</title>
		<link>https://sathiyam.tv/a-secret-revealed-in-egypt-after-3000-years-the-lost-city-of-meson/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 09:56:40 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659284</guid>

					<description><![CDATA[<p>எகிப்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான பிரமிடுகளும், இன்றும் விலகாத மர்மமான வரலாறுகளும் தான். அந்த மர்ம முடிச்சுகளில் ஒன்றைப் அவிழ்க்கும் விதமாக, எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஒரு அபூர்வ மணற்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எகிப்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ள இந்த மணற்கல், பல நூற்றாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த &#8216;மெசன்&#8217; (Mesen) என்ற மறைந்து போன ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க நகரத்தின் ரகசியத்தை உடைக்கப்போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். டெல் அபு சைஃபி [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-secret-revealed-in-egypt-after-3000-years-the-lost-city-of-meson/">எகிப்தில் 3000 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த ரகசியம்! மறைந்து போன &#8216;மெசன்&#8217; நகரம் ?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">எகிப்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான பிரமிடுகளும், இன்றும் விலகாத மர்மமான வரலாறுகளும் தான். அந்த மர்ம முடிச்சுகளில் ஒன்றைப் அவிழ்க்கும் விதமாக, எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஒரு அபூர்வ மணற்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">எகிப்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ள இந்த மணற்கல், பல நூற்றாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த &#8216;மெசன்&#8217; (Mesen) என்ற மறைந்து போன ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க நகரத்தின் ரகசியத்தை உடைக்கப்போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">டெல் அபு சைஃபி (Tell Abu Seifi) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மணற்கல் தூணானது, பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள &#8216;மோசேயின் வெளியேற்றப் பயணத்தோடு&#8217; (Exodus) தொடர்புடைய ஒரு முக்கியமான ராணுவப் பாதையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டு துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்ட மணற்கல் தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தான்.</p>



<p class="wp-block-paragraph">எகிப்தின் புகழ்பெற்ற மன்னரான இரண்டாம் ராம்செஸ் (Ramses II) அவர்களின் பட்டப் பெயர்கள் இந்தத் தூணின் மூன்று பக்கங்களில் செதுக்கப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">விவிலியக் கதைகளில் வரும் மோசேயின் காலத்தோடு தொடர்புடைய இந்த மன்னரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது, இது அந்தப் புகழ்பெற்ற காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், எகிப்தியக் கடவுளான &#8216;ஹோரஸ்&#8217;, இந்த மெசன் நகரத்தின் அதிபதி என்று அந்தத் தூணில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அந்த இடம் மறைந்து போன மெசன் நகரம் என்பதற்கான மிக வலிமையான ஆதாரமாகத் தொல்பொருள் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மற்றும் பலத்த பாதுகாப்புடன் கூடிய கோயில் வளாகம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">மண்ணால் ஆன செங்கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்ட சுவர்கள், தானியக் கிடங்குகள் மற்றும் அந்த இடத்திற்குச் செல்வதற்கான கல்பாதைகள் என ஒரு முழுமையான ராணுவ மற்றும் நிர்வாக மையம் அங்கு செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">எகிப்தையும் மத்திய தரைக்கடல் பகுதிகளையும் இணைக்கும் &#8216;ஹோரஸ் ராணுவப் பாதை&#8217; எனப்படும் ஒரு முக்கிய வழித்தடத்தில் இந்த நகரம் அமைந்திருந்தது.</p>



<p class="wp-block-paragraph">பிற்காலத்தில் பாரசீகர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் எனப் பல சாம்ராஜ்யங்கள் இந்த இடத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் தற்போதைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த மணற்கல் தூண் மட்டும் மெசன் நகரத்தைக் கண்டுபிடிப்பதற்கான முழுமையான ஆதாரம் இல்லை என்றாலும், அங்கு கிடைத்துள்ள கோயில் சிதிலங்களும் மற்ற வரலாற்றுத் தரவுகளும் இணைந்து, இது அந்த மறைந்து போன மெசன் நகரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதத்தை வலுப்படுத்துகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த மெசன் நகரம் கண்டுபிடிக்கப்பட்டால், பண்டைய எகிப்தின் ராணுவ வியூகங்கள் மற்றும் விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றுப் பாதைகள் குறித்த புதிய உண்மைகள் உலகிற்குத் தெரியவரும்.</p>



<p class="wp-block-paragraph">இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ள எகிப்தின் இந்தப் பகுதியில், ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>



<p class="wp-block-paragraph">வருங்காலத்தில் இந்த மெசன் நகரம் மனிதகுல வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-secret-revealed-in-egypt-after-3000-years-the-lost-city-of-meson/">எகிப்தில் 3000 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த ரகசியம்! மறைந்து போன &#8216;மெசன்&#8217; நகரம் ?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சாப்பாடு பில்லை கண்டு மிரண்டு போன &#8216;வாடிக்கையார்&#8217;! மன்னிப்பு கேட்ட நிறுவனம்!</title>
		<link>https://sathiyam.tv/customer-shocked-by-food-bill-company-apologizes/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 09:46:15 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659281</guid>

					<description><![CDATA[<p>பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பில், இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி,பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள &#8216;சப்கோ&#8217; (Subko) என்ற உணவகத்திற்குச் சென்ற ஒரு நபர், உணவுண்டு முடித்துவிட்டுத் தனக்கு வழங்கப்பட்ட ரசீதைப் பார்த்து உறையப் போயுள்ளார். அதில் அவருடைய பெயருக்குப் பதிலாக, அந்த உணவக ஊழியர்கள் அவரை அடையாளப்படுத்த &#8220;Little fat black shirt&#8221; என்று அச்சிட்டிருந்ததுதான் இந்தச் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/customer-shocked-by-food-bill-company-apologizes/">சாப்பாடு பில்லை கண்டு மிரண்டு போன &#8216;வாடிக்கையார்&#8217;! மன்னிப்பு கேட்ட நிறுவனம்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பில், இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி,பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள &#8216;சப்கோ&#8217; (Subko) என்ற உணவகத்திற்குச் சென்ற ஒரு நபர், உணவுண்டு முடித்துவிட்டுத் தனக்கு வழங்கப்பட்ட ரசீதைப் பார்த்து உறையப் போயுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அதில் அவருடைய பெயருக்குப் பதிலாக, அந்த உணவக ஊழியர்கள் அவரை அடையாளப்படுத்த &#8220;Little fat black shirt&#8221; என்று அச்சிட்டிருந்ததுதான் இந்தச் சர்ச்சைக்கும் மனவேதனைக்கும் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.</p>



<p class="wp-block-paragraph">பொதுவாக ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களை அவர்களின் பெயர், அமர்ந்திருக்கும் மேசை எண் அல்லது அவர்கள் ஆர்டர் செய்த உணவு விவரங்களை வைத்துத்தான் அடையாளப்படுத்துவார்கள்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், ஒரு மனிதனின் உடல் அமைப்பை வைத்தும், அவரது நிறம் மற்றும் உடையை வைத்தும் இழிவுபடுத்தும் விதமாக ரசீதில் அச்சிட்டது அநாகரீகத்தின் உச்சம் என்று பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது ரெடிட் பதிவில் குமுறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இது ஒரு நகைச்சுவைக்காகச் செய்யப்பட்டது என்று எளிதாகக் கடந்து போய்விட முடியாது என்றும், ஒரு ஆணின் உருவத்தைக் கேலி செய்வது மட்டும் எப்படிச் சரியாக இருக்கும் என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், அந்த உணவகத்திற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்தன.</p>



<p class="wp-block-paragraph">நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சப்கோ காபி ரோஸ்டர்ஸ் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகாருக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">&#8220;சில விஷயங்களை ரகசியமாகச் சரி செய்யலாம், ஆனால் சிலவற்றை உலகறியச் சத்தமாகச் சொல்லிச் சரி செய்ய வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">ஏனென்றால், இத்தகைய தவறுகளைக் கண்டு நாம் மௌனமாக இருப்பதுதான், அந்தத் தவறான கலாச்சாரம் தொடர்ந்து நீடிக்கக் காரணமாகிவிடும்&#8221; என்று அந்த நிறுவனம் நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">உருவக் கேலி (Body Shaming) என்பது எக்காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதில் யாருக்கும் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்றும் அந்த நிறுவனம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தங்களின் உட்புறப் புகார் தீர்க்கும் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், தவறு செய்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், சேவைத் துறையில் இருக்கும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களை எவ்வளவு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஒரு சிறிய வாசகம் ஒரு மனிதனின் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதையும், டிஜிட்டல் உலகில் ஒரு சிறு தவறு ஒரு நிறுவனத்தின் பெயரையே எப்படிச் சிதைக்கும் என்பதையும் இந்த பெங்களூரு உணவகச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/customer-shocked-by-food-bill-company-apologizes/">சாப்பாடு பில்லை கண்டு மிரண்டு போன &#8216;வாடிக்கையார்&#8217;! மன்னிப்பு கேட்ட நிறுவனம்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிட்காயின் செய்த &#8216;சம்பவம்&#8217;! 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!</title>
		<link>https://sathiyam.tv/bitcoin-makes-a-splash-a-high-not-seen-in-three-years/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 09:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659279</guid>

					<description><![CDATA[<p>கிரிப்டோகரன்சி சந்தையில், முதலீட்டாளர்களுக்கு, ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்தான பிட்காயின், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு வாரத்தில், மிக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து, 80,000 டாலர் என்ற புதிய இலக்கை நோக்கி, ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு பிட்காயினின் விலை, 78,588 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதன் மதிப்பு, 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/bitcoin-makes-a-splash-a-high-not-seen-in-three-years/">பிட்காயின் செய்த &#8216;சம்பவம்&#8217;! 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">கிரிப்டோகரன்சி சந்தையில், முதலீட்டாளர்களுக்கு, ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்தான பிட்காயின், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு வாரத்தில், மிக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து, 80,000 டாலர் என்ற புதிய இலக்கை நோக்கி, ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு பிட்காயினின் விலை, 78,588 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதன் மதிப்பு, 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஒட்டுமொத்தமாக, இந்த ஒரு வாரத்தில் மட்டும், பிட்காயினின் வளர்ச்சி, 24.5 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது, கடந்த 2023-ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குப் பிறகு, பிட்காயின் பதிவு செய்யும், மிகப்பெரிய வாராந்திர வளர்ச்சியாகும்.</p>



<p class="wp-block-paragraph">இந்த அதிரடி விலை உயர்வுக்குப் பின்னால் இருப்பது என்ன? செய்தி நிறுவனமான IANS-ன் தகவல்படி, அமெரிக்க நிதித்துறையின் ஒரு முக்கிய அறிவிப்புதான், இந்த மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">நீண்ட காலக் கடன் பத்திரங்களை, அமெரிக்கா, இருமடங்காகத் திரும்ப வாங்கும் என்ற அறிவிப்பு, சந்தையில், ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த அறிவிப்பால், பிட்காயினின் விலை குறையும் என்று கணித்து, &#8216;ஷார்ட் செல்லிங்&#8217; (Short Selling) செய்திருந்த முதலீட்டாளர்கள், பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து, சந்தையிலிருந்து வெளியேறினர். இது, பிட்காயினின் விலையை, மேலும் உயர வைத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த நம்பிக்கையான சூழல், பிட்காயினுடன் மட்டும் நிற்கவில்லை. தங்கத்தின் விலையும், கடந்த மே மாதத்திற்குப் பிறகு, தனது அதிகபட்ச விலையை எட்டியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், அதிபர் டொனால்ட் டிரம்ப், &#8216;காயின்பேஸ்&#8217; (Coinbase) போன்ற முன்னணி கிரிப்டோ நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்தது, கிரிப்டோ சந்தைக்கு, அரசின் ஆதரவு இருக்கிறது என்ற ஒரு நேர்மறையான சமிக்ஞையை அனுப்பியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த வாரம், நிறுவன முதலீட்டாளர்களும், மீண்டும் கிரிப்டோ சந்தையில், அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள 13 பிட்காயின் ETF-களில் மட்டும், இந்த ஒரு வாரத்தில், ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் குவிந்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இது, கிரிப்டோ சந்தையின் மீது, முதலீட்டாளர்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. 2025-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தனது உச்சபட்ச விலையான, 1,26,000 டாலர்களைத் தொட்ட பிட்காயின், பின்னர், ஒரு பெரும் சரிவைச் சந்தித்தது.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், இப்போது, மீண்டும் ஒரு புதிய எழுச்சியுடன், தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வளர்ச்சி தொடருமா, அல்லது, இது ஒரு தற்காலிக எழுச்சியா என்பதை, வரும் காலம்தான் தீர்மானிக்கும்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/bitcoin-makes-a-splash-a-high-not-seen-in-three-years/">பிட்காயின் செய்த &#8216;சம்பவம்&#8217;! 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திமுகவில் வெடித்த புதிய &#8216;பூகம்பம்&#8217;! வெளியான புது ரூல்ஸ் என்னென்ன?</title>
		<link>https://sathiyam.tv/a-new-upheaval-has-erupted-within-the-dmk-what-are-the-newly-released-rules/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 08:51:23 +0000</pubDate>
				<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659276</guid>

					<description><![CDATA[<p>தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கையில் எடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் உட்கட்டமைப்பையே அடியோடு மாற்றியமைக்கும் அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குச் சீனியர் நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழிவிடாததே முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்ட நிலையில், கட்சியில் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் வயது வரம்பு மற்றும் பதவிக்கான காலக்கெடு எனப் பல புரட்சிகரமான விதிகளை திமுக [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-new-upheaval-has-erupted-within-the-dmk-what-are-the-newly-released-rules/">திமுகவில் வெடித்த புதிய &#8216;பூகம்பம்&#8217;! வெளியான புது ரூல்ஸ் என்னென்ன?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கையில் எடுத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் உட்கட்டமைப்பையே அடியோடு மாற்றியமைக்கும் அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குச் சீனியர் நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழிவிடாததே முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்ட நிலையில், கட்சியில் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் வயது வரம்பு மற்றும் பதவிக்கான காலக்கெடு எனப் பல புரட்சிகரமான விதிகளை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த புதிய விதிகளின்படி, கட்சியின் அடிமட்ட அளவிலான கிளைக்கழகச் செயலாளர்களுக்கு 45 வயதும், வட்டக்கழகச் செயலாளர்களுக்கு 50 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அதேபோல், பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் நகரச் செயலாளர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான மாற்றம் என்னவென்றால், இனி எந்த ஒரு பதவியிலும் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நீடிக்க முடியாது.</p>



<p class="wp-block-paragraph">இந்த ஒற்றை விதியின் மூலம், பல தசாப்தங்களாக ஒரே பதவியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல மூத்த நிர்வாகிகளுக்கு இப்போது கலக்கம் ஏற்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மாவட்ட அளவில் மிகப்பெரிய மாற்றமாக, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110-ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டக் கழகம் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை செல்வாக்குடன் இருந்த &#8216;மாநகரச் செயலாளர்&#8217; என்ற பதவியே இனி கிடையாது என அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதன் மூலம் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்யவும், நிர்வாகத்தை இன்னும் மக்களுடன் நெருக்கமானதாக மாற்றவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை முழுமையாகச் சீரமைக்கவும், இளைஞர்களுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு அளிக்கவும் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த &#8216;மெகா சர்ஜரி&#8217; அரசியல் வட்டாரங்களில் ஒரு மிகப்பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சீனியர்களின் அனுபவமும் இளைஞர்களின் வேகமும் இணையப் போகும் இந்த புதிய திமுக, வரவிருக்கும் தேர்தல்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-new-upheaval-has-erupted-within-the-dmk-what-are-the-newly-released-rules/">திமுகவில் வெடித்த புதிய &#8216;பூகம்பம்&#8217;! வெளியான புது ரூல்ஸ் என்னென்ன?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துருக்கியை சிதைத்த &#8216;இஸ்ரேல்&#8217;! நெதன்யாகுவுக்கு சர்வதேச &#8216;பிடிவாரண்ட்&#8217;?</title>
		<link>https://sathiyam.tv/israel-devastates-turkey-international-arrest-warrant-for-netanyahu/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 07:49:51 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659274</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரப் போர் வெடித்துள்ளது. &#8220;சர்வாதிகாரி&#8221;, &#8220;இனப்படுகொலை&#8221; போன்ற மிகக்கடுமையான வார்த்தைகளால் இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாகச் சாடிக்கொள்வது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் வெறும் வார்த்தைப் போரோடு நின்றுவிடாமல், சட்ட ரீதியான நடவடிக்கையாகவும் உருவெடுத்துள்ளது. துருக்கி அரசு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு சர்வதேசப் பிடிவாரண்ட்டைப் பிறப்பிக்குமாறு இன்டர்போல் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/israel-devastates-turkey-international-arrest-warrant-for-netanyahu/">துருக்கியை சிதைத்த &#8216;இஸ்ரேல்&#8217;! நெதன்யாகுவுக்கு சர்வதேச &#8216;பிடிவாரண்ட்&#8217;?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரப் போர் வெடித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">&#8220;சர்வாதிகாரி&#8221;, &#8220;இனப்படுகொலை&#8221; போன்ற மிகக்கடுமையான வார்த்தைகளால் இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாகச் சாடிக்கொள்வது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த மோதல் வெறும் வார்த்தைப் போரோடு நின்றுவிடாமல், சட்ட ரீதியான நடவடிக்கையாகவும் உருவெடுத்துள்ளது. துருக்கி அரசு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு சர்வதேசப் பிடிவாரண்ட்டைப் பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த மே மாதம் காசா நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்த விவகாரத்தில், நெதன்யாகு இனப்படுகொலை மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளதாகத் துருக்கி குற்றம் சாட்டுகிறது.</p>



<p class="wp-block-paragraph">துருக்கியின் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சற்றும் எதிர்பாராத நெதன்யாகு, துருக்கியின் இந்தச் செயல் ஒரு மிகப்பெரிய கபட நாடகம் என்று வர்ணித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் எர்டோகன் ஒரு &#8220;சர்வாதிகாரி&#8221; என்றும், அவர் குர்திஷ் இன மக்களை ஒடுக்குவதோடு ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பவர் என்றும் மிகக்கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சமீபத்தில் சிரியாவில் துருக்கி எல்லைக்கு அருகே உள்ள வான்படைத் தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பகையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பிராந்தியத்தின் பாதுகாப்பைச் சீர்குலைக்கத் துருக்கி எடுக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரத்தில் நெதன்யாகுவை மட்டுமல்லாமல்,அபெக் மோஸ்கோவிச் (Afek Moskovici) என்ற இஸ்ரேலிய ராணுவ வீரரையும் துருக்கி நீதிமன்றம் குறிவைத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">காசாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு மற்றும் கட்டிடங்களை ராணுவ வாகனங்களைக் கொண்டு சிதைத்ததாக அவர் மீது கடுமையான புகார்கள் பதிவாகியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இதுமட்டுமல்லாமல், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் கிவீர்(Itamar Ben-Gvir), பிடிபட்ட நிவாரணப் பணியாளர்களை மண்டியிட வைத்து, கைகளைக் கட்டி வைத்து கிண்டல் செய்யும் வீடியோவை வெளியிட்டது உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">துருக்கியின் இந்தச் சட்டப் போராட்டத்திற்குப் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இந்த மோதலுக்குப் பின்னால் ஆழமான அரசியல் காரணங்களும் இருப்பதாகத் துருக்கி குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவே நெதன்யாகு இத்தகைய ஆக்ரோஷமான போக்கைக் கடைபிடிப்பதாக எர்டோகன் தரப்பு சாடுகிறது.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், இஸ்ரேலோ துருக்கியின் மிரட்டல்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இரு பெரும் சக்திகளுக்கு இடையே நிலவும் இந்தப் பகையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த ராஜதந்திர யுத்தம் ஒரு முழு அளவிலான போராக மாறுமா அல்லது சர்வதேச அழுத்தங்களால் தணியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/israel-devastates-turkey-international-arrest-warrant-for-netanyahu/">துருக்கியை சிதைத்த &#8216;இஸ்ரேல்&#8217;! நெதன்யாகுவுக்கு சர்வதேச &#8216;பிடிவாரண்ட்&#8217;?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சூர்யவன்ஷிக்கு வந்த இரட்டைச் சவால்!! என்ன செய்யப்போகிறார்?</title>
		<link>https://sathiyam.tv/a-double-challenge-for-suryavanshi-what-is-he-going-to-do/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 07:36:45 +0000</pubDate>
				<category><![CDATA[Sports]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659272</guid>

					<description><![CDATA[<p>இந்தியக் கிரிக்கெட்டின் இளைய நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயதிலேயே உலகையே வியக்க வைத்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தொடங்கவுள்ள துலீப் டிராபி கிரிக்கெட் தொடர், இவருக்கு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையப்போகிறது. = வெறும் 15 வயதில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பேற்பதும், அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட் எனப்படும் சிகப்புப் பந்து போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பதும் இவருக்கு முன்னால் உள்ள இரண்டு மிகப்பெரிய சவால்கள். வைபவ் ஏற்கனவே ஐபிஎல் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-double-challenge-for-suryavanshi-what-is-he-going-to-do/">சூர்யவன்ஷிக்கு வந்த இரட்டைச் சவால்!! என்ன செய்யப்போகிறார்?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இந்தியக் கிரிக்கெட்டின் இளைய நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயதிலேயே உலகையே வியக்க வைத்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தொடங்கவுள்ள துலீப் டிராபி கிரிக்கெட் தொடர், இவருக்கு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையப்போகிறது. =</p>



<p class="wp-block-paragraph">வெறும் 15 வயதில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பேற்பதும், அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட் எனப்படும் சிகப்புப் பந்து போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பதும் இவருக்கு முன்னால் உள்ள இரண்டு மிகப்பெரிய சவால்கள்.</p>



<p class="wp-block-paragraph">வைபவ் ஏற்கனவே ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். குறிப்பாகச் ஜிம்பாப்வே தொடரில் &#8216;தொடர் நாயகன்&#8217; விருது வென்று அசத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம்.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வைபவ், சிகப்புப் பந்து போட்டிகளில் இன்னும் தன்னை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.</p>



<p class="wp-block-paragraph">இதுவரை விளையாடிய எட்டு முதல் தரப் போட்டிகளில் அவரது ரன் சராசரி வெறும் 17 ஆக மட்டுமே உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்கத் திட்டமிட்ட வைபவ், கடந்த பத்து நாட்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் தங்கி, பந்துகளை எப்படித் தற்காப்பது மற்றும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்துகளை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்த தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தத் தொடரில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியில், வைபவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">முகமது ஷமி, முகேஷ் குமார் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் போன்ற அனுபவம் வாய்ந்த ஜாம்பவான்கள் இருக்கும் அணியில், 15 வயது சிறுவனுக்குத் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது சரியா என்ற கேள்வியை முன்னாள் வீரர்கள் எழுப்பி வருகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், இளம் வயதிலேயே இத்தகைய பொறுப்புகளைக் கொடுப்பது வைபவ்வை ஒரு முதிர்ச்சியான தலைவராக உருவாக்கும் என்று தேர்வுக் குழுவினர் நம்புகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மண், வைபவ்வின் கற்கும் திறனை வெகுவாகப் பாராட்டியிருப்பது இவருக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இஷான் கிஷன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி களமிறங்கும்போது, ரசிகர்களின் கவனம் முழுவதும் இந்த இளம் வீரரின் மீதே இருக்கும்.</p>



<p class="wp-block-paragraph">அதிரடியாகச் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வைபவ், இப்போது நிதானமாக நின்று டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளப் போகிறாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-double-challenge-for-suryavanshi-what-is-he-going-to-do/">சூர்யவன்ஷிக்கு வந்த இரட்டைச் சவால்!! என்ன செய்யப்போகிறார்?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஒரு மாதத்தில் 12,000 கோடியை தாண்டிய கடன்! தள்ளாடும் தமிழக அரசு?</title>
		<link>https://sathiyam.tv/debt-exceeds-12000-crore-in-a-single-month-is-the-tamil-nadu-government-faltering/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 07:32:06 +0000</pubDate>
				<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=659270</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள கடன் பத்திரங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தமிழக அரசு சுமார் 12,044 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே தமிழகத்தின் மொத்த கடன் சுமை 32,925 [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/debt-exceeds-12000-crore-in-a-single-month-is-the-tamil-nadu-government-faltering/">ஒரு மாதத்தில் 12,000 கோடியை தாண்டிய கடன்! தள்ளாடும் தமிழக அரசு?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தமிழக அரசு வெளியிட்டுள்ள கடன் பத்திரங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தமிழக அரசு சுமார் 12,044 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதன் மூலம், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே தமிழகத்தின் மொத்த கடன் சுமை 32,925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 20,881 கோடியாக இருந்த இந்தக் கடன் அளவு, வெறும் 30 நாட்களில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்திருப்பது பொருளாதார நிபுணர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளியே இத்தகைய கடன் உயர்விற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், மாநில ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் வரிப் பகிர்வு என அனைத்து வழிகளிலும் சேர்த்து சுமார் 89,718 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை மட்டும் சுமார் 25,267 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">வரவை விடச் செலவு பல மடங்கு அதிகமாக இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றிச் செயல்படுத்த அரசு தொடர்ந்து கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் செலவினப் பட்டியலில் அரசுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது ஏற்கனவே வாங்கிய கடன்களுக்காகச் செலுத்தப்படும் வட்டித் தொகையாகும்.</p>



<p class="wp-block-paragraph">கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 21,176 கோடி ரூபாய் வட்டி கட்டவே செலவிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியச் செலவு 17,237 கோடி ரூபாயாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அதாவது, அரசின் மொத்த வருவாயில் ஒரு பெரும் பகுதி பழைய கடன்களைச் சமாளிப்பதற்கும், நிர்வாக ரீதியான கட்டாயச் செலவுகளுக்குமே சரியாகப் போய்விடுகிறது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கடன் வாங்கும் அளவு சுமார் 2,000 கோடி ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph">புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், பழைய கடன் சுமைகளையும் நிதிப் பற்றாக்குறையையும் சமாளித்துக்கொண்டு புதிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஒருபுறம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவாயைப் பெருக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், மறுபுறம் உயர்ந்து வரும் கடன் சுமை மாநிலத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்குச் சவாலாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்த நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும், வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எத்தகைய அதிரடிப் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/debt-exceeds-12000-crore-in-a-single-month-is-the-tamil-nadu-government-faltering/">ஒரு மாதத்தில் 12,000 கோடியை தாண்டிய கடன்! தள்ளாடும் தமிழக அரசு?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
