<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sathiyam TV</title>
	<atom:link href="https://sathiyam.tv/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://sathiyam.tv/</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 01 Aug 2026 11:49:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://sathiyam.tv/wp-content/uploads/2024/11/cropped-cropped-Sathiyam-New-Logo-300x300-1-32x32.jpg</url>
	<title>Sathiyam TV</title>
	<link>https://sathiyam.tv/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரானுக்கு இந்தியா விடுத்த அதிரடி &#8216;எச்சரிக்கை&#8217;!</title>
		<link>https://sathiyam.tv/india-issues-a-stern-warning-to-iran/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 11:49:11 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658534</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷியுடன் ஒரு மிக முக்கியமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். இந்த உரையாடலின் போது, சர்வதேசக் கடல் வழிப்பாதைகளில் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகளை எந்தச் சூழ்நிலையிலும் இலக்காகக் கொள்ளக் கூடாது என ஜெய்சங்கர் ஈரானை மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர் மோதல்கள் குறித்து இந்தியா [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/india-issues-a-stern-warning-to-iran/">ஈரானுக்கு இந்தியா விடுத்த அதிரடி &#8216;எச்சரிக்கை&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷியுடன் ஒரு மிக முக்கியமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த உரையாடலின் போது, சர்வதேசக் கடல் வழிப்பாதைகளில் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகளை எந்தச் சூழ்நிலையிலும் இலக்காகக் கொள்ளக் கூடாது என ஜெய்சங்கர் ஈரானை மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph"> பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர் மோதல்கள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளதோடு, வன்முறையைக் கைவிட்டுத் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தியாவின் இந்தக் கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் நீடித்து வரும் இந்த மோதல்களால் இதுவரை 10 மாலுமிகள் உட்பட மொத்தம் 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">மேலும் 75-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சிகரமான தகவலை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தியர்கள் இந்த உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்தியக் குடிமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு தாக்குதலையும் எந்தத் தரப்பு நடத்தினாலும் அதனை இந்தியா வன்மையாகக் கண்டிக்கும் என ஜெய்சங்கர் தனது உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஜெய்சங்கரின் இந்த ராஜதந்திர நகர்வு என்பது ஈரான் பக்கத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இதேபோன்ற கவலையை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் அவர் பகிர்ந்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">கருங்கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் மீதும், வணிகக் கப்பல்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் உக்ரைனிடம் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக &#8216;எம்.வி ஓமர்பி&#8217; (Omar B)என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், சர்வதேச விதிகளின்படி கடல் வழிப் போக்குவரத்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரானில் சிக்கியிருந்த சுமார் 2,557 இந்தியர்களை ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் வழியாக இந்திய அரசு பாதுகாப்பாக மீட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தற்போது ஈரானில் சுமார் 7,000 இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">பாதுகாப்புச் சூழல் மேம்படும் வரை ஈரானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்களில் இந்தியர்களின் உயிரைப் பாதுகாப்பதே மத்திய அரசின் முதல் முன்னுரிமை என்பதை இந்த அதிரடி பேச்சுவார்த்தைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/india-issues-a-stern-warning-to-iran/">ஈரானுக்கு இந்தியா விடுத்த அதிரடி &#8216;எச்சரிக்கை&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொளத்தூரில் 3 EVM-ல் குளறுபடி? &#8211; ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!</title>
		<link>https://sathiyam.tv/glitch-in-3-evms-in-kolathur-stalin-takes-decisive-action/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 11:34:24 +0000</pubDate>
				<category><![CDATA[Politics]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658532</guid>

					<description><![CDATA[<p>தமிழக அரசியல் களத்தில் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் ஹாட் ஸ்பாட்டாக இருந்த கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள், தற்போது சட்ட ரீதியான போராட்டமாக மாறியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்தத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய திமுக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் இவிஎம் எந்திரங்கள் சரிபார்ப்புப் பணியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/glitch-in-3-evms-in-kolathur-stalin-takes-decisive-action/">கொளத்தூரில் 3 EVM-ல் குளறுபடி? &#8211; ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழக அரசியல் களத்தில் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் ஹாட் ஸ்பாட்டாக இருந்த கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள், தற்போது சட்ட ரீதியான போராட்டமாக மாறியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்தத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய திமுக கோரிக்கை விடுத்திருந்தது.</p>



<p class="wp-block-paragraph">இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் இவிஎம் எந்திரங்கள் சரிபார்ப்புப் பணியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">வாக்கு எந்திரங்கள் ஆய்வின் போது திமுக சார்பில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக இல்லை என்றும், இதன் மூலம் 30 சதவீதத்திற்கும் மேலாக எந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக, 57-வது பூத் எண் கொண்ட இயந்திரத்தில் முறையான சீல்கள் இல்லை என்றும், எந்திரத்தில் ஒட்டப்பட்டிருந்த அட்ரஸ் டேக் புதியதாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இது எந்திரங்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்பதற்கான சட்ட ரீதியான மற்றும் அறிவியல் பூர்வமான சான்று என அவர் வாதிடுகிறார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தக் குளறுபடிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 19 கேள்விகள் அடங்கிய கடிதத்தை திமுக சமர்ப்பித்துள்ளது. மேலும், மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்திற்கோ அல்லது உச்சநீதிமன்றத்திற்கோ கொண்டு செல்ல திமுக திட்டமிட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக 57-வது பூத் இயந்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால், அதனைத் தனியாகச் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தத் தேர்தல் நடைமுறையிலேயே தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக, இதனை ஒரு மிகப்பெரிய தேர்தல் முறைகேடாக முன்னிறுத்தத் தயாராகி வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">மறுபுறம், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இந்தத் தேர்தல் எந்திரங்கள் சரிபார்ப்புப் பணி 100 சதவீதம் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவே இந்த ஆய்வு நடத்தப்படுவதாகவும், இதுவரை நடந்த சோதனைகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் உள்ள இயந்திரங்களை மட்டும் ஆய்வு செய்து, அதில் பதிவான வாக்குகளைப் பிரதிநிதிகளிடம் காண்பித்த பின் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">திமுக மற்றும் தேர்தல் ஆணையம் இடையே நிலவும் இந்த முரண்பட்ட கருத்துக்கள், கொளத்தூர் தொகுதி விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/glitch-in-3-evms-in-kolathur-stalin-takes-decisive-action/">கொளத்தூரில் 3 EVM-ல் குளறுபடி? &#8211; ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் வெடிக்கும் &#8216;உள்நாட்டுப்போர்&#8217;? ஆசிம் முனீருக்கு அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை!</title>
		<link>https://sathiyam.tv/is-a-civil-war-brewing-in-pakistan-minister-issues-a-startling-warning-to-asim-munir/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 11:23:12 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658528</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தி, அந்த நாட்டின் ஆட்சியாளர்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி, அந்நாட்டு இளைஞர்களின் ஏமாற்றம் ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியாக வெடிக்கக்கூடும் எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவில் &#8216;காக்ரோச் ஜனதா கட்சி&#8217; (CJP) நடத்திய தீவிரமான போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/is-a-civil-war-brewing-in-pakistan-minister-issues-a-startling-warning-to-asim-munir/">பாகிஸ்தானில் வெடிக்கும் &#8216;உள்நாட்டுப்போர்&#8217;? ஆசிம் முனீருக்கு அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தி, அந்த நாட்டின் ஆட்சியாளர்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி, அந்நாட்டு இளைஞர்களின் ஏமாற்றம் ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியாக வெடிக்கக்கூடும் எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">சமீபத்தில் இந்தியாவில் &#8216;காக்ரோச் ஜனதா கட்சி&#8217; (CJP) நடத்திய தீவிரமான போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தானிலும் அத்தகைய ஒரு சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அமைச்சர் மோஷின் நக்வி தனது உரையில் பயன்படுத்திய ஒரு விசித்திரமான உவமை தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்படும் இளைஞர்களைச் சிலர் &#8216;கரப்பான் பூச்சிகள்&#8217; என்று இழிவாகக் கருதலாம், ஆனால் அந்த &#8216;கரப்பான் பூச்சிகள்&#8217; ஒன்றாக இணைந்தால், இந்த ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையே கவிழ்த்துவிடும் வலிமை அவர்களுக்கு உண்டு என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தானின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், அடிப்படைச் சீர்திருத்தங்கள் இன்றி வெறும் மேலோட்டமான திட்டங்களால் நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் கடும் கடன் சுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிர்வாக முறை ஆகியவை இளைஞர்களிடையே மிகப்பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இஸ்லாமாபாத்தில் மாணவர்கள் திரண்டு வருவது, அரசின் மீதான நம்பிக்கையின்மையையே காட்டுகிறது.</p>



<p class="wp-block-paragraph">வெறும் நிதி உதவிகளோ அல்லது தற்காலிகத் திட்டங்களோ இளைஞர்களைச் சமாதானப்படுத்தாது என்றும், அவர்களுக்குத் தேவையானது முறையான வேலைவாய்ப்பும், தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் நீதியுமே என்று அமைச்சர் நக்வி சுட்டிக்காட்டினார்.</p>



<p class="wp-block-paragraph">இறுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அமைச்சர் மோஷின் நக்வி முன்வைத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">நாட்டின் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், அரசியல்வாதிகள் இந்த அமைப்பினைச் சீர் செய்யாதவரை அந்த உழைப்பால் எந்தப் பயனும் ஏற்படாது எனத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">ஜனநாயகத்தை நிலைநிறுத்த ராணுவம் ஒத்துழைத்தாலும், ஆட்சி நிர்வாகத்தை முறைப்படுத்துவது ஆட்சியாளர்களின் கைகளிலேயே உள்ளது. இளைஞர்களின் இந்த ஆக்ரோஷம் ஒரு மிகப்பெரிய போராட்டமாக மாறுவதற்குள், தகுந்த மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால் பாகிஸ்தான் மீள முடியாத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதே இந்த எச்சரிக்கையின் சாராம்சமாக இருக்கிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/is-a-civil-war-brewing-in-pakistan-minister-issues-a-startling-warning-to-asim-munir/">பாகிஸ்தானில் வெடிக்கும் &#8216;உள்நாட்டுப்போர்&#8217;? ஆசிம் முனீருக்கு அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>BCCI எடுத்த ரிஸ்க்கான முடிவு! &#8216;சூர்யவன்ஷி&#8217;க்கு காத்திருக்கும் சவால்!</title>
		<link>https://sathiyam.tv/a-risky-decision-by-the-bcci-a-challenge-awaits-sooryavanshi/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 11:06:10 +0000</pubDate>
				<category><![CDATA[Sports]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658525</guid>

					<description><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது ஒரு 15 வயது சிறுவனின் பெயர் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார். இந்த நிலையில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-risky-decision-by-the-bcci-a-challenge-awaits-sooryavanshi/">BCCI எடுத்த ரிஸ்க்கான முடிவு! &#8216;சூர்யவன்ஷி&#8217;க்கு காத்திருக்கும் சவால்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது ஒரு 15 வயது சிறுவனின் பெயர் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த நிலையில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகவே இதனைத் தேர்வுக் குழுவினர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>



<p class="wp-block-paragraph">அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் துணை கேப்டன் பதவி, ஒரு கிரிக்கெட் வீரராக அவரது வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகப் பிசிசிஐ கருதுகிறது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஐபிஎல் தொடரில் ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியை வென்றது முதல், ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றது வரை வைபவின் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. ஐசிசி தரவரிசையில் கூட ஒரே அடியாக 230 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார் இந்த இளம் புயல்.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், கிரிக்கெட் வல்லுநர்கள் இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறார்கள். வெறும் 15 வயதே ஆன ஒரு சிறுவன் மீது இவ்வளவு பெரிய பொறுப்பைச் சுமத்துவது, அவருடைய இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">சச்சின் டெண்டுல்கரையே உதாரணமாகக் காட்டும் வல்லுநர்கள், உலகின் மிகச்சிறந்த பேட்டராக இருந்த சச்சினுக்கே கேப்டன்ஷிப் என்பது ஒரு கூடுதல் அழுத்தமாகவே இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோன்ற ஒரு அழுத்தத்தை வைபவ் மீது இப்போதே திணிப்பது அவருடைய எதிர்காலத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதே இவர்களது வாதமாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">வைபவ் சூர்யவன்ஷி இப்போதுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். அவர் மீது தேவையில்லாத எதிர்பார்ப்புகளைச் சுமத்தாமல், ஒரு சிறுவனாக அவர் விளையாட்டை ரசித்து விளையாட அனுமதிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பிசிசிஐ இவரை ஒரு எதிர்கால கேப்டனாக உருவாக்க நினைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிதானம் அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த அதிரடி முடிவு வைபவின் கேரியரை உயர்த்தப்போகிறதா அல்லது கூடுதல் சுமையாக மாறப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-risky-decision-by-the-bcci-a-challenge-awaits-sooryavanshi/">BCCI எடுத்த ரிஸ்க்கான முடிவு! &#8216;சூர்யவன்ஷி&#8217;க்கு காத்திருக்கும் சவால்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட 15 வயது சிறுமி! மோடி செய்த &#8216;நெகிழ்ச்சி&#8217; சம்பவம்!</title>
		<link>https://sathiyam.tv/15-year-old-girl-apologizes-to-the-prime-minister-a-heartwarming-gesture-by-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 10:18:30 +0000</pubDate>
				<category><![CDATA[Politics]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658522</guid>

					<description><![CDATA[<p>ஒரு அரசியல் போராட்டம், அங்குக் கிளம்பிய தரம் தாழ்ந்த விமர்சனம், பின்னர் தொடர்ந்த சட்ட நடவடிக்கை… இவை அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றிப் போட்டிருக்கிறது பிரதமர் மோடியின் பெருந்தன்மையான ஒரு பதிவு. தமக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒரு சிறுமியை மன்னிக்கும்படி அவர் விடுத்துள்ள வேண்டுகோள் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டுத் தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/15-year-old-girl-apologizes-to-the-prime-minister-a-heartwarming-gesture-by-modi/">பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட 15 வயது சிறுமி! மோடி செய்த &#8216;நெகிழ்ச்சி&#8217; சம்பவம்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ஒரு அரசியல் போராட்டம், அங்குக் கிளம்பிய தரம் தாழ்ந்த விமர்சனம், பின்னர் தொடர்ந்த சட்ட நடவடிக்கை… இவை அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றிப் போட்டிருக்கிறது பிரதமர் மோடியின் பெருந்தன்மையான ஒரு பதிவு. தமக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒரு சிறுமியை மன்னிக்கும்படி அவர் விடுத்துள்ள வேண்டுகோள் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டுத் தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, ஒரு பெண் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரைக் குறித்து மிகவும் தரக்குறைவான மற்றும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் மீது நொய்டா மற்றும் டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அந்தப் பெண்ணுக்கு 25 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பெண் தற்போது மன்னிப்புக் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">கைகளைக் கூப்பியபடி அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், &#8220;தனக்கு 25 வயது அல்ல, வெறும் 15 வயதுதான்&#8221; என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். &#8220;சிலரின் தூண்டுதலால் தான் அவ்வாறு பேசிவிட்டதாகவும், பிரதமர் குறித்துத் தான் பேசிய வார்த்தைகள் மன்னிக்க முடியாதவை என்றும், இதுவே தனது முதல் மற்றும் கடைசித் தவறு&#8221; என்றும் அவர் கூறியுள்ளார். தன்னையே கண்ணாடியில் பார்க்க வெட்கப்படுவதாகக் கூறிய அந்தச் சிறுமி, ஒட்டுமொத்த நாடும் தன்னை மன்னித்து ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் பதிவு வெளியாவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே, பிரதமர் மோடி ஒரு நெகிழ்ச்சியான வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.</p>



<p class="wp-block-paragraph">பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில், &#8220;ஜந்தர் மந்தரில் நடந்ததை உலகமே பார்த்தது. சில இளைஞர்கள் நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். என்னையும் எனது தாயையும் கூட இழிவுபடுத்தினர். ஆனால், இதற்குப் பழிவாங்குவது தீர்வாகாது. சிறுவயதில் தவறுகள் நடப்பது இயல்பு. அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். இவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்து அலைக்கழிப்பதை விட, சரியான பாதையைக் காட்டுவதே நமது கடமை. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன், நீங்களும் அவர்களை மன்னித்து விடுங்கள்&#8221; என்று அவர் உருக்கமாகப் பேசினார்.</p>



<p class="wp-block-paragraph">பிரதமரின் இந்தப் பெருந்தன்மையான அறிவிப்புக்குப் பிறகு, அந்தச் சிறுமியின் மன்னிப்பு வீடியோவும் வெளியானதால் இந்த விவகாரம் தற்போது ஒரு சுமூகமான முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவெளியில் நாகரீகமான விமர்சனங்களே அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த மனிதாபிமான நடவடிக்கை அரசியல் எல்லைகளைக் கடந்து பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/15-year-old-girl-apologizes-to-the-prime-minister-a-heartwarming-gesture-by-modi/">பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட 15 வயது சிறுமி! மோடி செய்த &#8216;நெகிழ்ச்சி&#8217; சம்பவம்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் இன்று அதிகனமழை எச்சரிக்கை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!</title>
		<link>https://sathiyam.tv/warning-of-very-heavy-rainfall-in-tamil-nadu-today-orange-alert-for-3-districts/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 09:49:39 +0000</pubDate>
				<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658520</guid>

					<description><![CDATA[<p>மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/warning-of-very-heavy-rainfall-in-tamil-nadu-today-orange-alert-for-3-districts/">தமிழகத்தில் இன்று அதிகனமழை எச்சரிக்கை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதன் தாக்கத்தால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் 11 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிகக் கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">எனவே, மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/warning-of-very-heavy-rainfall-in-tamil-nadu-today-orange-alert-for-3-districts/">தமிழகத்தில் இன்று அதிகனமழை எச்சரிக்கை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொதுமக்களுக்கு &#8216;சூப்பர் நியூஸ்&#8217;! முதலமைச்சர் விஜய் அரசு அதிரடி உத்தரவு!</title>
		<link>https://sathiyam.tv/super-news-for-the-public-chief-minister-vijays-government-issues-a-bold-order/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 09:38:54 +0000</pubDate>
				<category><![CDATA[Politics]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658518</guid>

					<description><![CDATA[<p>தமிழக அரசு இயந்திரத்தில் ஒரு மிகப்பெரிய நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது இனி 30 நாட்களுக்குள் கட்டாயமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவின் மிக முக்கியமான சாராம்சம். தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துத் துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கும் இந்த நேரடி [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/super-news-for-the-public-chief-minister-vijays-government-issues-a-bold-order/">பொதுமக்களுக்கு &#8216;சூப்பர் நியூஸ்&#8217;! முதலமைச்சர் விஜய் அரசு அதிரடி உத்தரவு!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழக அரசு இயந்திரத்தில் ஒரு மிகப்பெரிய நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது இனி 30 நாட்களுக்குள் கட்டாயமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவின் மிக முக்கியமான சாராம்சம்.</p>



<p class="wp-block-paragraph">தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துத் துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கும் இந்த நேரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதன் மூலம் அரசு அலுவலகங்களில் மாதக்கணக்கில் மனுக்கள் தேங்கிக் கிடக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">வழக்கமாக பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகவும், புகார்களுக்காகவும் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை இழுபறியாகவே இருந்து வரும் சூழலில், இனி ஒவ்வொரு மனுவையும் ஒரு முறையான குறைதீர்க்கும் நடைமுறை மூலம் அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஒவ்வொரு வாரமும் தங்களது துறையில் பெறப்பட்ட மனுக்களின் நிலை என்ன, எத்தனை மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்துத் துறைத் தலைவர்கள் வாராந்திர ஆய்வு நடத்த வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">அதுமட்டுமின்றி, முக்கியமான துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து அந்தந்தத் துறை அமைச்சர்களுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் தகவல்களைப் பகிர வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">நிர்வாகத்தை இன்னும் செம்மைப்படுத்தும் நோக்கில், உயரதிகாரிகள் வெறும் அலுவலகத்தில் மட்டும் அமராமல், ஒவ்வொரு மாதமும் மாவட்ட வாரியாகக் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தக் கள ஆய்வின் முடிவுகளைத் தாமதமின்றித் தலைமைச் செயலாளரிடம் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசு பிறப்பிக்கும் அனைத்து அரசு ஆணைகளும் (Government Orders) அந்தந்தத் துறை இணையதளங்களில் உடனுக்குடன் பதிவேற்றப்பட வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக ஆளுநர் உரையில் இடம் பெற்ற அறிவிப்புகள் தொடர்பான அரசாணைகளை எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக, &#8220;உங்கள் அரசை அறிந்து கொள்ளுங்கள்&#8221; (Know Your Government) என்ற புதிய முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதற்காக ஒவ்வொரு துறையிலும் ஒரு தொடர்பு அதிகாரியை நியமித்து, தகவல் தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அதேசமயம், &#8216;எல் நினோ&#8217; தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சிச் சூழலை எதிர்கொள்ள இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி மற்றும் நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றங்கள் சாமானிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/super-news-for-the-public-chief-minister-vijays-government-issues-a-bold-order/">பொதுமக்களுக்கு &#8216;சூப்பர் நியூஸ்&#8217;! முதலமைச்சர் விஜய் அரசு அதிரடி உத்தரவு!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8220;129 டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள்&#8221; முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்</title>
		<link>https://sathiyam.tv/close-129-tasmac-shops-immediately-annamalai-urges-chief-minister-vijay/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 09:34:34 +0000</pubDate>
				<category><![CDATA[Politics]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658516</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்குப் பிறகும், விதிமுறைகளை மீறி மேலும் பல டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக &#8216;வி தி லீடர்ஸ்&#8217; தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற நோக்கில் &#8216;வி தி லீடர்ஸ்&#8217; சார்பில் கள ஆய்வு [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/close-129-tasmac-shops-immediately-annamalai-urges-chief-minister-vijay/">&#8220;129 டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள்&#8221; முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.</p>



<p class="wp-block-paragraph">இந்த நடவடிக்கைக்குப் பிறகும், விதிமுறைகளை மீறி மேலும் பல டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக &#8216;வி தி லீடர்ஸ்&#8217; தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற நோக்கில் &#8216;வி தி லீடர்ஸ்&#8217; சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">முதற்கட்டமாக சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரசின் பட்டியலில் இடம்பெறாத மேலும் 10 டாஸ்மாக் கடைகள் 500 மீட்டர் விதிமுறையை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த தகவல்களை சரிபார்த்ததில், மாநிலம் முழுவதும் மொத்தம் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் விதிமுறைகளை மீறி தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அந்த கடைகளின் பட்டியலும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">எனவே, 500 மீட்டர் விதிமுறையை முழுமையாக அமல்படுத்தி, விதிமுறைகளை மீறும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/close-129-tasmac-shops-immediately-annamalai-urges-chief-minister-vijay/">&#8220;129 டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள்&#8221; முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்ய ராணுவத்தில் மாட்டிக்கொண்ட &#8216;இந்தியர்கள்&#8217;! மக்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!</title>
		<link>https://sathiyam.tv/indians-caught-in-the-russian-army-ministry-of-external-affairs-issues-warning-to-the-public/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 09:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658513</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போர்க்களத்தில், இந்தியர்கள் சிக்கியிருப்பது தொடர்பான மிக முக்கியமான தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது பகிர்ந்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் உதவிப் பணியாளர்களாகச் சேர்ந்து துயரத்தைச் சந்தித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியக் குடிமக்களை மீட்பதில் அரசு காட்டி வரும் தீவிரத்தைப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். வெளியுறவுத்துறை [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/indians-caught-in-the-russian-army-ministry-of-external-affairs-issues-warning-to-the-public/">ரஷ்ய ராணுவத்தில் மாட்டிக்கொண்ட &#8216;இந்தியர்கள்&#8217;! மக்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போர்க்களத்தில், இந்தியர்கள் சிக்கியிருப்பது தொடர்பான மிக முக்கியமான தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது பகிர்ந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ரஷ்ய ராணுவத்தில் உதவிப் பணியாளர்களாகச் சேர்ந்து துயரத்தைச் சந்தித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இது தொடர்பாகத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியக் குடிமக்களை மீட்பதில் அரசு காட்டி வரும் தீவிரத்தைப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.</p>



<p class="wp-block-paragraph">வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ரஷ்ய ராணுவத்தில் இன்னும் சுமார் 24 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மத்திய அரசின் தொடர் முயற்சியால் இதுவரை 139 இந்தியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும், மோசடி ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு இன்னும் பல இந்தியர்கள் போர்க்களத்தில் சிக்கியிருப்பது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சமையல் செய்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராணுவத்தின் முன்னணிப் போர்க்களங்களில் இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரத்தில் மிகுந்த வேதனை தரும் விஷயம் என்னவென்றால், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">பலர் காணாமல் போயுள்ள நிலையில், காயமடைந்தவர்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில், வெளிநாடுகளில் அதிகச் சம்பளத்தில் வேலை தருவதாகக் கூறும் ஏஜென்ட்களின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி, ஆபத்தான பணிகளுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய இளைஞர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பாதுகாப்பற்ற முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தற்போது அதிரடியாகத் தலையிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேக &#8216;நோடல் அதிகாரியை&#8217; (Nodal Officer) நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது போன்ற பணிகளை இந்த அதிகாரி துரிதப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/indians-caught-in-the-russian-army-ministry-of-external-affairs-issues-warning-to-the-public/">ரஷ்ய ராணுவத்தில் மாட்டிக்கொண்ட &#8216;இந்தியர்கள்&#8217;! மக்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;இனிமேல்தான் ஆரம்பம்!&#8217; ஆகஸ்ட் முதல் மாறும் வானிலை! காத்திருக்கும் &#8216;பேராபத்து&#8217;!</title>
		<link>https://sathiyam.tv/its-just-the-beginning-weather-to-change-from-august-a-major-danger-awaits/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 07:31:23 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658510</guid>

					<description><![CDATA[<p>உலக வானிலை ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள சமீபத்திய எச்சரிக்கை அறிக்கை, ஒட்டுமொத்த உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், &#8216;எல் நினோ&#8217; (El Nino) வானிலை மாற்றம் மிகத் தீவிரமடையப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றம், உலகெங்கிலும் வரலாறு காணாத வெப்ப அலைகளையும், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களையும் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/its-just-the-beginning-weather-to-change-from-august-a-major-danger-awaits/">&#8216;இனிமேல்தான் ஆரம்பம்!&#8217; ஆகஸ்ட் முதல் மாறும் வானிலை! காத்திருக்கும் &#8216;பேராபத்து&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">உலக வானிலை ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள சமீபத்திய எச்சரிக்கை அறிக்கை, ஒட்டுமொத்த உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், &#8216;எல் நினோ&#8217; (El Nino) வானிலை மாற்றம் மிகத் தீவிரமடையப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றம், உலகெங்கிலும் வரலாறு காணாத வெப்ப அலைகளையும், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களையும் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு, இந்த எல் நினோ மேலும் எரிபொருளை ஊற்றுவது போல அமையும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(António Guterres) இது குறித்து விடுத்துள்ள அறிக்கை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">&#8220;எல் நினோ இப்போது நமது கதவு வாசலில் இல்லை, அது வீட்டிற்குள்ளேயே நுழைந்து வெப்பத்தை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது&#8221; என்று அவர் எச்சரித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">காட்டுத்தீ, கடல்களில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வழக்கத்திற்கு மாறான வெப்பக் காற்று ஆகியவை இனி வரும் காலங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் என்றும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">கடல் மட்டத்தின் வெப்பநிலை வழக்கத்தை விட 2.9 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த எல் நினோ தாக்கம் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும். பொதுவாக எல் நினோ காலங்களில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விடக் குறைய அதிக வாய்ப்புள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதன் காரணமாக வறட்சி மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதே சமயம், இந்தியப் பெருங்கடல் டைபோல் (Indian Ocean Dipole) எனப்படும் நிகழ்வும் இணையும்போது, சில பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், மற்ற பகுதிகளில் கடும் வறட்சியும் என வானிலை சமநிலையற்ற நிலைக்குத் தள்ளப்படும்.</p>



<p class="wp-block-paragraph">இது மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கும் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்ற படிம எரிபொருட்களின் பயன்பாடே இந்த நெருக்கடிக்கு அடிநாதமாக உள்ளது என்று ஐநா பொதுச்செயலாளர் கடுமையாகச் சாடியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">நாம் இப்போதே விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறினால், வரும் காலங்களில் இயற்கைச் சீற்றங்கள் இன்னும் கொடியதாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/its-just-the-beginning-weather-to-change-from-august-a-major-danger-awaits/">&#8216;இனிமேல்தான் ஆரம்பம்!&#8217; ஆகஸ்ட் முதல் மாறும் வானிலை! காத்திருக்கும் &#8216;பேராபத்து&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
