குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை

2070

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.