அருந்ததியர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சீமானை கைது செய்து விசாரிக்காதது ஏன்? என்று, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

100
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சீமானுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீதான விசாரணையின் போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சீமானை கைது செய்து விசாரிக்காதது ஏன்? என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் கேள்வி எழுப்பினார்.

சீமானை கைது செய்வதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்தார்.