இந்த இடத்துல தான் நான் நயந்தாராவை முதலில் பாத்தேன் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

295

அப்போது பேசிய நயன்தாரா “தனது திருமணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

திருமணம் முடிந்தவுடன் இந்த ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தது ஏன் என விக்னேஷ் சிவன் கூறியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆர்த்தியது.

திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய நயன்தாரா “தனது திருமணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், “இந்த இடத்தில்தான், நான் கதை கூற நயன்தாராவை முதன்முதலில் சந்தித்தேன் என்றும், அதன் காரணமாகவே இந்த நிகழ்வை இங்கு நடத்த விரும்பினேன்” என நெகிழ்ச்சியாக கூறினார்.