துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை

336

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக தமிழகம் வந்து உள்ளார்.

அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வரவேற்றனர்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார்.

குறிப்பாக வருகிற மே 28-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னால் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை சிறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.