Advertisement
உத்தரகாண்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ரிஷிகேஷ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
Advertisement
இதன் தொடர்ச்சியாக, ரிஷிகேஷில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோடோ மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.