உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி வலியுறுத்தல்

247

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா-வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா சபையின் 77-வது கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை தண்டிக்க வேண்டும் என்றும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா புரிந்துள்ள போர்க்குற்றங்களை  விசாரிக்க தனித் தீர்ப்பாயம் அமைக்கும் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ரஷ்யாவை சர்வதேச அமைப்புகளில் இருந்து நீக்கி தனிமைப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்