tnpsc குரூப் – 4 தேர்வு இன்று அறிவிப்பு

395
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளன.இது குறித்த அறிவிப்பு எப்போது வருமென தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் – 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி செயலர், குரூப் -4 குறித்த தவறான தகவல்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. டிஎன்பிஎஸ்சி அறிவிக்கைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என விளக்கமும் கொடுத்தார்.

இந்தநிலையில், குரூப் – 4 தேர்வு குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.