மேம்பாலத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து

348

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில், காரில் பயணித்த வழக்கறிஞர் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் 4 மாத பெண் குழந்தை ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 3 வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.