தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

247

கும்மிடிப்பூண்டியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக்கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.