அட பாவமே..! நாய்கள் ஜாக்கிரதை போர்ட் வைக்கல போல

197
Advertisement

பொதுவா திருடர்கள் திறமை அளவிடமுடியாத அளவில் இருக்கும்.ஆனா அது எல்லா நேரங்களிலும் அமையாது.உதாரணமா திருடிய இடத்துல காவல்துறைக்கு துப்பு கிடைக்கும் வகையில் ஏதாச்சும் மறந்து விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.

சில திருடர்கள் சின்னப்பிள்ளை தனமாக ஏதாச்சும் செஞ்சு தானாக மாட்டிக்கொள்வார்கள்.இங்கும் அப்படி தான் ஒரு திருடன் மாட்டிக்கொள்கிறான் ஆனா யாருடனு நீங்களே பாருங்க….

வீடு ஒன்றில் அதன் உரிமையாளர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் திருட வந்துள்ளான்.ஆனா பாவம் அவனுக்கு தெரில வீட்டுக்குள்ள இரண்டு நாய்கள் இருக்குனு.

வீட்டின் உள்ள ஒரு இடத்தில் வசமாக மாட்டிக்கொண்ட திருடன் நாய்களிடமிருந்து தப்பிக்க,அங்கிருந்த இரும்பு கதவு மீது ஏறிக்கொண்டான்.பின் அருகில் உள்ளவர்கள் அவனை மீட்கும் வரை அந்த நாய்கள் விட்டபடி தெரியவில்லை.சில நிமிடங்களில் வீடியோ நிறுத்தப்படுகிறது.

வேடிக்கையாக நாய்களிடம் மாட்டிக்கொள்ளும் திருடனின் வீடியோ இணையத்தில் வைரகிலாகி வருகிறது.