சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்….

117
Advertisement

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார். நீதிபதி டி.ராஜாவும் கடந்த 24ஆம் தேதி ஓய்வுபெற்றதால், நீதிபதி வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து  குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1962ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டு, பின்னர் 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.