நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

207

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக சோனியா மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.