291 பெண்கள் உள்பட தமிழகத்தில் 589 பேருக்கு கொரோனா

328

நேற்று புதிதாக 15 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேர், கோவையில் 39 பேர் உள்பட 29 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 9 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 31 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 96 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உள்ளது. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 694 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,311 பேரும், செங்கல்பட்டில் 552 பேரும், கோவையில் 172 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 137 பேர் மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 208 பேர் கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 18 ஆயிரத்து 866 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.