கேரள தங்கக் கடத்தல் வழக்கு – “ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது”

337

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்ட வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி கமலா, மகள் வீனா ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் ஸ்வப்பனா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கு  மறுப்பு தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் எனவும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் இவ்வாறு குற்றம் சுமத்துவதன் மூலம் அரசின் உறுதித் தன்மையை அசைத்து விடலாம் என கருதுவது வீண் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.