மழை வெள்ளத்தில் குண்டானுடன் அடித்திச்செல்லும் “பிரியாணி”

266
Advertisement

பிரியாணி என்ற பெயருக்கே பலர் அடிமையாக உள்ள இந்த நாட்டுல, “இப்படி ஆயிடுச்சே குமாரு… ”  என்று பிரியாணி பிரியர்கள் வருத்தப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிட்டு வருது.

ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது,இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறாய் ஓடுகிறது. வீடுகள், கடைகள் கூட வெள்ளத்தில் மூழ்கின.

இதற்கிடையில், அங்கு ஒரு பிரியாணி கடையின் வெளியில்  வைக்கப்பட்டிருந்த “பிரியாணி” குண்டாவுடன் வெள்ள நீரில் அடித்து சென்றது.ஆசையுடன் பிரியாணி சாப்பிடவந்தவர்கள் கண் முன்னே தண்ணீரில் மிதந்து செல்லும் பிரியாணி குண்டாவை பார்த்து வருத்தத்துடன் திரும்பிச்சென்றனர்.