கடல் சிங்கத்திடமிருந்து நொடி பொழுதில் தப்பிய சிறுமி

177
Advertisement

ரெட்டிட் இணையதளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் கடல் சிங்கம் ஒன்று ரோட்டில்  படுத்தபடி இருக்க,அதன் மேல் குழந்தை ஒன்று உட்காந்து உள்ளது.

இதை குழந்தையின் பெற்றோர் படம்பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.ஒருகட்டத்தில் அந்த கடல் சிங்கம் தன் மேல் உக்காந்து உள்ள குழந்தையை தலையை திருப்பி கடிக்க  முயற்சிக்கிறது.

அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை நிலைதடுமாறி கீழே விழுந்து விட,உடனே குழந்தையின் பெற்றோர் பதறிப்போய் குழந்தையை மீட்டுவிடுகின்றனர்.வேடிக்கையாக இருக்கும் என நினைத்த தருணம் நொடி பொழுதில் ஆபத்தில் முடிந்திருக்கும்.