பள்ளிக்கு 2 நாள் விடுமுறை

299

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா  தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு  காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 19 மாணவர்களுக்கும், பெற்றோர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.