மணமேடையில் அக்காவிற்கு பதிலாக தங்கையின் கழுத்தில் மாலை போட்ட மணமகள்

219
Advertisement

சமீப காலமாக திருமணங்களில் நிகழும் வேடிக்கையான நிகழ்வின் வீடியோக்கள் இணையத்தில் உலாவருகிறது.அந்த வருசையில், சில  தினங்களுக்கு முன் ஒரு  திருமணத்தில் நடந்த வேடிக்கையான சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் திருமணத்தில், மணமகன் மற்றும் மணமகள் மணக்கோலத்தில் மேடையில் நின்றுகொண்டு இருக்க, அந்த மணமகன் அதிகமாக மது அருந்தியதால் நேராக நிற்கக்கூட முடியாமல் அங்கும் இங்கும் தள்ளாடியபடி நிற்கிறார்.

மணமகளின் தங்கை மணமகனுக்கு  மாலையை கையில் தந்து மணமகளுடன் கழுத்தில் இருவரும் மாற்றுக்கொள்ள கூறுகிறார்.நிதானம் இல்லாமல் இருக்கும் மணமகன்,  கையில் வாங்கிய மாலையை மணமகளின் கழுத்தில் போடாமல் மாலையை கையில் தந்த மணமகளின் தங்கையின் கழுத்தில் போட்டு விடுகிறார்.

அதனால் ஆத்திரமடைந்த மணமகளின் தங்கை, மணமகனின்  கன்னத்தில் பளார் பளார் என நான்கு விட்டு மாலையை எடுக்க சொல்லி அவரின் அக்காவின் கழுத்தில் போடவைக்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில்ஜ் வைரலாகி வருகிறது.