வேளாண் துறைக்கு ரூ. 33, 007 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்

315
Advertisement

தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.அதில், இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணி முதல் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் அறிவித்த பட்ஜெட்டில், வேளாண்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 33,007,68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டு திருத்திய மதிப்பீடு ரூ. 32,775,78 விட அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.