ஒடிசாவில் அறிய “கரும்புலி” ஒன்று தன் எல்லையை குறிக்கும் அற்புத காட்சி

200
Advertisement

ஒடிசாவின் சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் அரியவகை கரும்புலி ஒன்று , தனது நிலப்பரப்பைக் குறிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா,சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வைரலாகி வரும் இந்த வீடியோவில் , வனப்பகுதியில் கரும்புலி ஒன்று தன் எல்லையை குறிக்கும் விதம் ஒரு மரத்தின் மீது ஏறி,மரத்தின் பட்டைகளை உரித்து விட்டு அங்கிருந்து சென்றது.மிக  குறைந்த எண்ணிக்கையில் அரிதாக காணப்படும் இந்த கரும்புலிகள் 1993 ஆம் ஆண்டு இங்கு இருப்பதாக கூறப்பட்டாலும், 2007 இல் தான்  அதிகாரப்பூர்வமாக இப்பகுதியில் காணப்பட்டது.