“வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்”

298

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை ஊழியர்கள் இன்று முதல் 3 மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பிடிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

no work no pay என்ற அடிப்படையில் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்கவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.