கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டம்

414

பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், ரேஷன் பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள், இன்று கடைகளை அடைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் 3 நாள், அதாவது 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.