ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

277

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பங்களா தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக  நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முத்துக்குமார் என்ற வியாபாரி வீட்டை வாடகைக்கு எடுத்து, பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.