Reserve பெட்டியில் பெய்த மழை அதிர்ச்சியில் பயணிகள்

273

மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் கொட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழைபெய்து வருகிறது.  இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய துரந்தோ அதிவேக விரைவு  ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி இருக்கையில் மழை நீர், ஷவர் போல் உள்ளே கொட்டுகிறது. 

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.