பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

281

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. 

இயற்கை அழகுடன் உள்ள இந்த அருவியில் குளித்தால், உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடும் என கூறப்படுகிறது.

அதன்காரணமாக பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் அருவியில் குழந்தைகளுடன் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.