சந்தைகள் இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை

341

பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேரம் மின் வெட்டு நீடித்து வருகிறது.

இந்நிலையில், மின்சாரத்தை மிச்சப்படுத்த பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சந்தைகள் இனி இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாமாபாத் நகரில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.