பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு

255
Advertisement

பள்ளிக்கல்வி துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள பணியிடங்களில் 114 இடங்கள் இளைஞர்களுக்கானதும், 38 இடங்கள் அனுபவம் தேவைப்படும் பணிகளாகவும் உள்ளன.

ஆர்வமும் தகுதியும் உடைய இளைஞர்கள் https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களை சீராக செயல்படுத்தும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுடன் இணைந்து 2 வருடங்கள் வேலை செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் ஜூனியர்களுக்கு மாதம் 32 ஆயிரமும், சீனியர்களுக்கு 45 ஆயிரமும் stipend வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.