ஒருத்தர் லீவ் போட எத்தனை பேர் பொய் சொல்றது !

181
Advertisement

ஒருவரின்  வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் உடன் இருப்பவர்கள் நண்பர்கள் தான்.நல்ல பழக்கத்தால் முன்னேறியவர்களும் உண்டு , தகாத நட்பால் வாழ்க்கையை இழந்தவர்களும் உண்டு.இந்நிலையில் இங்கு ஒருவருக்கு அவரின் நண்பர்கள் உதவு  செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.அப்படி என்ன செய்தார்கள் என்று நீங்களே பாருங்கள்.

மும்பையை சேர்ந்த பிரையன் மிராண்ட் என்பர் குறிப்பிட்ட நாளன்று விடுமுறை  எடுக்க நினைத்தார்.ஆனால் சரியான காரணம் இல்லாமால் அவரின் மூத்த அதிகாரி விடுமுறை வழங்கமாட்டார் என்பதால்,இவருடன் தினம் உள்ளூர் மின்சார இரயிலில் பயணிக்கும்  நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார்.இவர்களுக்கென்று தனி வாட்ஸ் அப் குரூப் உள்ளது.

இவர்கள் முன்கூட்டிய பேசிவைத்து,பிரையன் அவர் அலுவலகம் செல்லும் ரயில் தடத்தை குறிப்பிட்டு.’இன்று இரயில் சேவை உள்ளதா ? என சந்தேகத்துடன் கேட்கிறார்.அதற்கு மற்ற நண்பர்கள் ஒருவர்பின் ஒருவராக “இல்லை”, “இன்று சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்பதை மீண்டும் மீண்டும் அனுப்பியுள்ளனர்.

சற்று நேரத்தில், இந்த உரையாடலை அவரின் உயர் அதிகாரிக்கு அனுப்பி விடுமுறை பெற்றார் பிரையன் மிராண்ட்.இதற்கு உதவிய அவரின் நண்பர்களும் நன்றி சொல்லி அவர் அனுப்பிய குறும்செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.