ஆயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அழித்து மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்…

74
Advertisement

ஆயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் முன்னிலையில் மும்பை சுங்கத்துறையினர் அழித்தனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டிஆர்ஐ, மும்பை மண்டலப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட ஆயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருள்களை அழிக்கும் பணிகள் மே 26 அன்று மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 9கிலோ கோகைன், 16கிலோ ஹெராயின், 198 கிலோ மெத்தம்பேட்டமைன், 2ஆயிரத்து118 கிராம் கஞ்சா, மாண்ட்ராக்ஸ் மாத்திரை ஆகியவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.