எட்டு வயது சிறுவனின் மடியில் சகோதரனின் உடல்-இதயத்தை உலுக்கிய சம்பவம்

196
Advertisement

வறுமையினால் பல்வேறு துயரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த வருசையில்,மற்றொரு சம்பவம் பார்ப்பவர்களின்  இதயங்கள்  உடையும் விதம்  நிகழ்ந்துள்ளது.

 மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்கு, பத்ரா கிராமத்தில் வசிக்கும் பூஜாராம் ஜாதவ் என்பவர்  தனது இரண்டு வயது மகன் ராஜாவை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரின் இரண்டு வயது மகன்  உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து, தகனச் சடங்குகளை முடிக்க தனது குழந்தையின் உடலை  கிராமத்திற்கு எடுத்துச் செல்ல ஜாதவ் மருத்துவமனை நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.ஆனால் மருத்துவமனை உதவி செய்ய மறுத்துவிட்டது எனவும்,

தனியார் ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுக்க பணம் இல்லை என்பதால்,இறந்த இரண்டு வயது மகனின் உடலை, 8 வயதான அவரின் மூத்த மகனின் மடியில் வைத்துகொள்ளாமாறு கூறிவிட்டு, உடலை எடுத்து செல்ல ஏற்பாடு செல்ல சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் ஜாதவ்.

இதற்கிடையில்,சாலை ஓரம் தன் தம்பியின் உடலை வெள்ளை நிற துணியால் பொத்தி,ஈக்கள் மொய்க்க உட்காந்துள்ளான் அந்த 8 வயது சிறுவன்.பின்பு  இந்த தகவல் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுவன், ஈக்கள் மொய்க்கும் தன் சகோதரனின் உடலுடன் சாலை ஓரம் உட்காந்து இருப்பதும்,இறந்த  உடலின் கையில் ஒரு நொறுக்கு தீனின்  கவர் இருப்பதும் பார்ப்பவர்களின் இதயங்களை ஒடைந்துபோக செய்கிறது.