லக்கிம்பூர் வன்முறை – உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

239
lakhimpur violence
Advertisement

லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா என உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா என்றும் லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

ஆசிஷ் மிஸ்ராவுக்கு நாளை வரை அவகாசம் கொடுத்திருப்பதாக உ.பி.அரசு கூறியதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், சாட்சிகளை மிரட்டக்கூடாது; தடயங்களை அழிக்கக்கூடாது; இதனை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது.