“ஏதாவது செய்யுங்கள்” அதிபர் ஜோ பைடனை நோக்கி மக்கள் கூச்சல்

219

கடந்த மே 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் 18 வயது இளைஞர்  நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடடில் 19 பள்ளிக்குழந்தைகள் 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார்.

பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின் அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனையும் செய்த பின்னர் வெளியே வந்த அதிபர் ஜோபைடனை நோக்கி, அங்கிருந்த மக்கள் ஏதாவது செய்யுங்கள் என கூச்சலிட்டார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர், “நிச்சயமாக , என தெரிவித்தபடியே அங்கிருந்து சென்றார்.