பெண் சுட்டுக்கொலை

479

ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில், பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர்களை பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த முயன்றார்.

30 வயது மிக்க அந்த பெண் கத்தியுடன் தங்களை நோக்கி வருவதை பார்த்த இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.