காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது

334

ஜம்மு-காஷ்மீர் ஹஸ்ரட்பல் பகுதியில் நடந்த தேசிய மாநாட்டு கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் விளைவுகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு முனையிலும் எதிர்கொள்ளும் வேதனைகளின் ஆழத்தைப் பார்த்து மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்தார்.

2019 ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட ஜனநாயகமற்ற, அரசியலமைப்பிற்கு எதிரான முடிவால், தற்போது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக கூறிய பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவர சட்டரீதியிலும், ஜனநாயக ரீதியிலும் போராடுவோம் என தெரிவித்தார்.