ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி

366

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவ்வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும் தொடர்பு இருப்பதால், அவர்மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால், டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் வெளிநாடு செல்ல முயன்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.