இஸ்ரோவின் GSLV  F-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் பாய்கிறது…

106
Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, GSLV  F-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதற்கான 27 அரை மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கியது. வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் பாய்தவற்கு GSLV  F-12 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட NVS-01 என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கான NVS வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து விரிவுபடுத்த கூடுதலாக L-1 பேண்ட் சிக்னல்’களை ராக்கெட் உள்ளடக்கியது ஆகும். 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.