இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

270
idukki-dam
Advertisement

கேரளாவில் தொடர் மழை காரணமாக இடுக்கி அணையில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 3 முறை நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 4வது முறையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இடுக்கி அணையின் ஒரு பகுதியான செறுதோனி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.