வண்டியிலயா போறீங்க.. ஜாக்கிரதையா போங்க..

334
helmet
Advertisement

இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

சென்னையில் 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.

இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இருசக்கர வானங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைகவசம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னை பெருநகர பகுதிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விபத்திலா நகரை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.