காணாமல் போன இளம் பாடகியின் உடல் மீட்பு

458

அரியானாவில் காணாமல் போன இளம் பாடகியின் துண்டுகளான உடலை மீட்டு 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த அரியான்வி மொழி பாடகி சங்கீதா என்பவர் கடந்த 11ந்தேதி காணாமல் போனார்.

2 வாரங்கள் கழித்து அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் பாலம் ஒன்றின் அருகே புதைக்கப்பட்ட அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கொலை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், டெல்லியில் இருந்து இசை வீடியோ ஒன்றை படப்பதிவு செய்வதற்காக 2 பேர் அந்த பாடகியை ரோத்தக் நகருக்கு அழைத்து சென்றனர்.

அதன்பின் பல நாட்களாக அவரை, அவரது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை.

செல்போனும் அணைக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி டெல்லி காவல் நிலையத்தில் கடந்த 14ந்தேதி குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

கடந்த சனிக்கிழமை செல்போன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதனை பயன்படுத்திய நபர் ரவி என கண்டறியப்பட்டார்.

அவரது கூட்டாளி அனில் என 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இளம் பாடகியை அவர்கள் சதி திட்டம் தீட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

டெல்லியில் இருந்து அழைத்து வந்து மயக்க மருந்து கலந்து கொடுத்து பாடகியை அவர்கள் கொலை செய்துள்ளனர்.

இதன்பின்னர், துண்டுகளாக உடலை சாலையோரம் புதைத்து சென்றுள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க இருவரும் சங்கீதாவுடன் நண்பர்களாக பழகியுள்ளனர்.

ரவி மீது சங்கீதா பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றும் புகாராக அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும், அரியானாவின் மேகம் பகுதியில் பணியாற்றி, வசித்து வருகின்றனர்.

தொடர்ந்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.