தங்க கடத்தலில் புதுமை… தங்கப்பசையாக கடத்தல் …

635
Advertisement

சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு புதுமையான முறையில் பாதங்களில் மறைத்து ஒட்டவைத்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்கப்பசையை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்தது .

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது பயணி ஒருவரின் நடை சற்று வித்யாசமாக இருந்தது. கால்களில் அணிந்திருந்த செருப்புகளை இழுத்து இழுத்து நடந்தாா். இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
செருப்பை கழட்ட சொல்லி அவருடைய இரண்டு கால்களையும் தூக்கிப் பார்த்தனா். 2 கால்களின் அடிப்பாதங்களில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது.அதை பிரித்து பாா்த்தபோது,தங்கப்பசை அடங்கிய சிறிய பாா்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். அதோடு மிகவும் புதுமையான முறையில் தங்கத்தை காலில் ஒட்ட வைத்து மறைத்து எடுத்து வந்த அந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.