கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வம்

370

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்காரணமாக தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைவதால், கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.