முதல் உலக போரில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் கண்டுபுடிப்பு

303

முதல் உலக போரின் போது கடலில் மூழ்கிய ஜெர்மன் நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள், 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்பரப்பில் முதல் உலக போர் காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட , ஜெர்மன் யு- போட் நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. U 111 ஜெர்மன் நீர் மூழ்கி கப்பல் கடந்த 1922ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையினரால், வர்ஜீனியா கடற்கரையில் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெட்கோவிக் என்ற ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா கடற்கரையில் 400 அடி ஆழத்தில் கப்பல் சிதைவை கண்டுபிடித்துள்ளார். இது தவிர முதல் மற்றும் 2ஆம் உலக போரின் போது மூழ்கடிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட ஜெர்மன் நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.