அப்பா… “நான் பாஸ் ஆயிட்டேன்” !

319
Advertisement

பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் எப்பவும் குழந்தைகள் தான் , அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தாலும் சரி.குழந்தைகள் அதன் பள்ளியின் முதல் நாளிலிருந்தே பெற்றோர்கள் தன் குழந்தை எதிர்காலத்தில் இந்த வேலைக்கு சென்றால் நல்லாருக்கும் என நினைக்க ஆரமிச்சுடுவாங்க.

குழந்தையின் எதிர்காலத்திற்காக எந்த எந்த வழியில் அவனுக்கு நல்ல படிப்பை கொடுக்கமுடியுமோ அதை கஷ்டப்பட்டாவது முழுமையாக குழந்தைக்கு கொடுப்பார்கள்.அதே அந்த குழந்தை பெற்றோர்களின் எதிர்போர்த்தபடி வந்ததால்,பெற்றோர்களுக்கு இதை தவிர்த்து அவர்களின் முழு  வாழ்க்கையில் என மகிழ்ச்சியாக இருக்க முடியும் ?

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில்,இளைஞர் ஒருவர் தன் தந்தை ஆசையின்படி, சில தினங்களுக்கு முன் குறிப்பிட்ட முக்கிய தேர்வு ஒன்றை எழுதியுள்ளார்.தன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த முடிவுகளை தன் அறையில் மடிக்கணியில் பார்த்துக்கொண்டு இருந்த அவர்,சட்டெனெ  உணர்ச்சிவசப்படுகிறார்.பின் அருகில் உள்ள அறையில் இருக்கும் தன் தந்தையை அழைக்கிறார்.தந்தையும் தன் மகன் குரல் கேட்டு,உள்ள வருகிறார்.

உணச்சிவசப்படும் மகன்,தந்தையிடம் “அப்பா நான் பாஸ் ஆயிட்டேன் என கூறி,அவரின் முடிவுகளை காட்டுகிறார்.அதை பார்க்கும்  தந்தை ஆனந்த கண்ணீருடன் தன் மகனை அனைத்துக்கொள்கிறார்.

அனைவரின் வாழ்வோடு ஒத்துப்போகும் இந்த தருணம் இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த வீடியோவை பகிரும் பலர்,இதில் வருவது போல அவர்கள் முக்கிய தேர்வுகளின் பாஸ் ஆன தருணத்தை பகிர்ந்துகொண்டனர்.

லாஸ்ட் பெஞ்ச் பசங்களா ,இதைப்பார்த்து தங்கள் தேர்வுக்கு முந்துன ஒரு ராத்திரி மட்டுமே  படித்து  ஆல் பாஸ் பெற்ற மாஸான தருணத்தை பகிர்ந்து வருகின்றனர்.