சாலையில் குட்டி ஈன்ற யானை

214

உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ஆலம்பட்டி காட்டுப்பகுதியில், ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது.

காட்டு யானை சாலையை மறித்தபடி நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்தனர்.

சிலர் யானையை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், யானை திடீரென குட்டியை ஈன்றது.

பின்னர் சிறிது நேரத்தில் குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது.