கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர வேண்டுமா? மருந்தாக மாறும் கீரை!

165
Advertisement

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது,

ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. அதுபோல இளைஞர்களுக்கும் அதிகமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.
ஆனால் இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்குச் சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.


முடக்கத்தான் கீரை வகையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது, இந்தக் கீரையைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் பெக் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், இந்த ஹேர் பெக்கை மிகவும் எளிதில் செய்ய முடியும்.
முதலில் முடக்கத்தான் கீரையை தண்ணீர் வழியாகச் சுத்தம் செய்ய வேண்டும், மேலும் 2 கைப்பிடி வெந்தயத்தை தனியாக 4 மணிநேரத்திற்குத் தண்ணீரில் ஊறவிட வேண்டும்.


பின்னர் முடக்கத்தான் கீரை மற்றும் ஊறவைத்த வெந்தையத்தோடு, கொஞ்சம் தயிரை சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த இந்த கலவையை வடிகட்ட வேண்டும், வடிகட்டிய பிறகு கிடைக்கும் சாற்றில் கரிசலாங்கண்ணி பவுடர் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை தலா ஒரு கரண்டி சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் ஹேர் பேக் தயார்.


இந்த ஹேர் பெக்கை தலைமுடிக்கு போடுவதற்கு முன்பு தலையில் இருக்கும் சிக்குகளை எடுத்து விட்டு , தேங்காய் எண்ணெயை வைத்து தலைமுடியை நன்றாக சீவிய பிறகு, ஹேர் பெக்கை தலைமுடியின் அடிவரை நன்கு மசாஜ் செய்யவும்.
20 முதல் 30 நிமிடம் வரை தலையில் ஹேர் பெக் ஊறியதும் , சாம்பு போட்டு குளித்தால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும் இந்த ஹேர் பெக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் 3 மாதங்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.